வியாழன், 7 ஏப்ரல், 2011

மயிலாகுமா எந்நிலையிலும் வான்கோழி !
















ஒவ்வொருத்தருக்கும் என்று ஒரு
தனித்துவம் என்ற ஒன்று உண்டு !
அந்த தனித்துவத்தின் திறனான்மையை
முழுவதுமாக பயன்படுத்தி அதன் பொருட்டு
நம்மை சார்ந்த, சாராத யாவரும் பயனிக்க
வேண்டுமளவிற்கு அமைந்(த்)திட வேண்டுமே !
                     -  அல்லாது  -
யாரோ ஒருவர் அவர் தன் தனித்துவத்தால்
புகழின் உச்சிக்கு சென்ற நிலை அறிந்து                  
தானும் அதுபோல ஆக எண்ணி
நம்மையும் எல்லோரும் ஆஹா என்னே இவன் என 
என்ன வேண்டும் என்ற எண்ணத்தினால் எண்ணிலடங்கா
புகழ்ச்சி என்னும் மதம் தலைக்கேறி
அதனால் சேதம் யாருக்குமில்லாது தான்
மட்டுமே தன்னால் அழியும் நிலையை
உண்டாக்கி விடும் என்பதே இதன் சாராம்சம் !

எந்த ஒரு நம்முடைய செயல்பாட்டின்
நிலைமை நம் சிந்தையை வருடுவதாக
இருக்கவேண்டும் மாறாக சீ(தூ)ண்டுவதாக
அமைந்து சீரான நம் வாழ்க்கை தடம்
பிறழாமல் பார்த்துக்கொள்வதுவும் நம்
நெஞ்சத்தில் தினம் எழுகின்ற லட்சியமாக
இருக்கவேண்டுமே தவிர அதை அலட்சியம்
செய்பவர்களாக இருக்க கூடாது !

மூன்றாவது பத்தியில் வருவதைத்தான்
நான் மேற்கூறியஅந்த அழகுமிகு
நயமான உள்ளத்தை மயிலறகால் மட்டுமே
வருடும் வண்ணமிகு சொற்றொடர் !
எந்நிலையிலும் தன்னிலை மறவாது
பிறரை போல் ஆவதற்கு முயற்சி செய்யலாம்
தவறில்லை அதற்கும் ஒரு எல்லையை
தமக்கு தானே வளர்த்துக்கொண்டு
அதிலிருந்து மா(மீ)றாது  இருந்தால்
மனிதர்களிடயே நாம் வீழாது இருக்கலாம் ! !