செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

வேண்டும் இதுவே நமக்கு வேண்டும் !!

சொந்தத்தில் இல்லை எனும் சொலை சொல்லாது வேண்டும்!
கொடுப்பதாக இருப்பின் கர்ணனைபோல் கொடுக்க வேண்டும் !

தந்தை சொல் கேட்பதிலே (பரசு)ராமனாய் மாற வேண்டும்!
கெடுதல் செய்பவரையும் வணங்குவதில் ராமனாய் இருக்க வேண்டும்  !

நண்பனின் நலனில் அக்கறைஉள்ள நல்நண்பனாக வேண்டும்!
கனவிலும் பிறர்க்கு நல்லதையே செய்வது போன்று நினைக்க வேண்டும்  !

பிறருக்காக அழுவதிலும் ஒரு சுகம் இருப்பதை உணர வேண்டும்!
கருணை காட்டுவதில் ஒவ்வொருவரும் தாயாய் திகழ வேண்டும்  !

மனிதனை எந்நிலையிலும் மனிதனாக பாவிக்கும் எண்ணம் வேண்டும்!
எவர் ஒருவரையும் கீழ்த்தரமாக நினைக்காத உள்ளம் வேண்டும்  !

ஊரோடு ஒத்து வாழ்வதில் நிலத்தை சேரும் மழைநீர் போல வாழ வேண்டும்!
பச்சோந்தியின் நிலையில்லா நிறம் போன்ற குணம் மாறாதது வேண்டும் !


நண்பனின் செய்கையை எந்த சூழ்நிலையிலும் சந்தேகிக்காதது வேண்டும் !
நம்நலன் பொருட்டு யாரொருவரும் பாதிக்காது பார்த்துகொள்ள வேண்டும்!


நம்முடைய ஒவ்வொரு செயலும் மனிதநேயம் மீறாமலிருக்க வேண்டும் !
நாம் எப்பொழுதும் நம்  மனசாட்சியின் சொல்படி மட்டுமே நடக்க வேண்டும்!


நகைச்சுவை பேச்சு அருகில் உள்ளவரை தீண்டாதவாறு அமைய வேண்டும்!
யாருக்காகவும் நம் நாட்டை விட்டுக்கொடுக்காத தேசப்பற்று வேண்டும் !!






















0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'