வெள்ளி, 31 டிசம்பர், 2010

கடவுளே உன்னிடம் ஒரு நிமிடம்!

கடவுளே ஒவ்வொரு மனிதனின்
செயலுக்கும் காரணம் நீ தான் !
அவன்  இந்த ஜென்மத்தில்
என்ன நல்ல காரியம் செய்கின்றான்
என்னென்ன பாவங்கள் புரிகின்றான்
என்பதை வைத்தே அவனுடைய
விதி என்று சொல்லப்படுகிற உன்னுடைய
லீலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் .

உன்னுடைய  கணிப்பு அனைத்தும்
மனிதன் அவனுடைய முன் ஜென்மத்தில்
அவனவன் செய்த பாவ புண்ணியத்தை
வைத்தே நீ கணக்கிடுவதாக
எல்லோரும் சொல்ல கேள்வி!
உண்மையிலேயே  இந்த அடிப்படையை
கொண்டு தான் நீ உன் செயல்களை
நடத்துகிறாய் என்றால் கடவுளே
உன்னிடம் ஒரு நிமிடம்!

உன்னுடைய அனுமதியோடு
உனக்கு ஒரு யோசனை
மனிதனின் முன் ஜென்மம்
என்ற ஒன்றை யாரும்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை !
அதை யாரும் நான் போன
ஜென்மத்தில் இப்படி இருந்தேன்
அப்படி இருந்தேன் என்று
உணர்ந்து சொன்னவர்கள் இல்லை
அப்படி இருக்கும் பொழுது
அவனின் முன் ஜென்மத்தை
வைத்து இந்த ஜென்மத்தில்
அவனுடைய வாழ்க்கை அமையக்கூடாது !

இந்த ஜென்மத்தில் அவன்
செய்கின்ற பாவ புண்ணியத்தை
வைத்து அவனுக்கு வாழ்க்கையை
நீ அமைத்தால் தான்
மனிதனுக்கு உன்னிடத்தில் மரியாதையுடன்
கூடிய பய பக்தி  இருக்கும்.
அப்பொழுது தான் மனிதனுக்கு
வாழ்க்கையில் தவறு ஏதும்
செய்யாமல் தான் இருக்கும்
வரை நல்லதை செய்வார்கள்.

பணத்துக்காக மானத்தை விட்டு
இழி செயலில் ஈடுபட்டு
சம்பாரிக்கும் ஆண்களுக்கும் உன்
மேல் பயம் வரும் .
மனிதனுக்கு மனிதன் பே(வே)தம்
பார்க்காமல் மனிதனை மனிதனாக
நடத்துவதற்கு முயல்வார்கள்.
மனமறிந்து பிறர்க்கு கெடுதல்
செய்பவர்களை கடவுளே அவர்களை
நீ இந்த பூமியில் விட்டு வைக்காதே !
உடனே அவர்களுக்கு உயர்
பதவி கொடுத்து வானுலகத்திற்கு
அனுப்பி வைத்து விடு !
அப்பொழுது தான் உன்மேல்
மக்களாக பிறந்தவர்களுக்கு நம்பிக்கை
ஏற்பட்டு உன்னை நம்புவார்கள் .
நீ(கடவுள்) மக்களுக்கு மட்டும் தான்
உரியவனாக இருக்கவேண்டுமே தவிர
மாக்களாக வாழ்பவர்களுக்கு  அல்ல!

செவ்வாய், 14 டிசம்பர், 2010

இப்படியும் வாழலாமே !

முட்களாய் தான் இருக்கின்றன நா(ம்)ன்
செல்கின்ற எல்லா சாலைகளும் அதற்காக
வருத்தப்படவில்லை ......... மாறாக
என் கால்களை நானே இரும்பாக
பக்குவப்படுத்(தி)த பழகிக்கொண்டேன் ! .                                                                                                                                                                                             
உனக்கென்று  ஒரு சரியான 
பாதையை வகுத்துக்கொள்
உயிரே போவதாக இருந்தாலும்
சற்றும் அதிலிருந்து விலகாமல்
இருந்து விடு  இல்லையேல்   இறந்து விடு!

நேர்மை தவறி தவறான வழியில்
பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களே
ஒரு நிமிடம் கர்மவீரர் காமராஜரை
நினைத்து பாருங்கள் உண்மையிலேயே
மனசாட்சி இருந்தால்  திருந்திவிடுவீர்கள்.

அமில மழை போன்ற நயவஞ்சகர்களின்                 
அசுத்தமான வார்த்தைகள்  என் வாழ்வெனும்
குடைதனை பொசுக்கின ..... இருந்தும்
ஒவ்வொரு துளியின் இடைவெளியிலும்
நுழைந்து  நல்லவனாகவே  வெளியில் வந்தேன் !

                                                                  
நல்லவனாக வாழ்வது கடினம் போல
தோன்றும் ஆனால் இரவில் நீ
தூங்குவதற்கு முன் நினைத்து பார்!
அதனுடைய  மகத்துவம்  புரியும்,
உன்மேல் உனக்கே மரியாதை வரும் .

அப்படி ஒன்றும் மிகவும்
எளிதானதல்ல ... வாழ்க்கை வாழ்வதற்கு 
அப்படி ஒன்றும் மிக மிக
கடினமுமல்ல... வாழ்க்கையை வாழ்வதற்கு 
உன்னுடைய நன்னடத்தை தான் வாழ்க்கை!.....

மனிதா!  நீ  சாவதற்குள்
ஒரு நாளேனும் நல்லவனாக
இருந்து பார்!  அதுவும் நீ உன் சுய நினைவில்
இருக்கும்போது... அப்போது தான்
 நீ இந்த பூமியில் வந்து பிறந்ததற்கான
அர்த்தத்தை உணர்ந்து கொள்வாய் ! !....

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

(அரிமா) நட்பின் மாண்பு

அரிமா என்றாலே சேவை எனும் 
நீரை எல்லோருக்கும் வாரிவழங்குவதில்
எப்படி  எல்லோருக்கும் கொடுப்பதனால்
குறையாத அந்த கடலை போன்றவர்கள் !
நாம் இங்கு காணவிருப்பதோ
அந்த பெருமைக்குறிய நம் அரிமா
நண்பர்களின் நட்பின் மாண்பு
பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வையே !



நண்பர்களில் எல்லோரும் சந்தோசமாக 
இருக்கிறார்கள் என்பதை விட 
எவர் ஒருவருமே வருத்தப்படவில்லை 
என்பதே மிகச் சிறந்த ஒன்றாகும் 
போட்டி இருக்க வேண்டும் 
அது பொறாமை இல்லாத 
சேவை ஒன்றையே  அடிப்படையாக 
கொண்டு அமைய வேண்டும் 


ஆராய்தல் வேண்டும் நட்புக்கு  முன்பு  
ஆராய்ச்சி கூடாது நட்புக்கு  பின்பு 
இது சாதாரணமாக   நட்புக்குரியது 
இந்த வசதி கூட நம்
அரிமா நண்பர்களுக்கு கிடையாது !
விட்டுக்கொடுத்தவர்கள் தாழ்வதுமில்லை
விட்டுக்கொடுக்காதவர்கள் தாழ்ந்த்தவருமில்லை 


பாசமது மிகுந்து விட்டால் 
கோபமது சற்று பாசத்தினை       
எப்போதாவது மறைத்திருக்கும்
எப்படி மரக்கிளை கனியை 
மறைத்திருக்குமோ அது போல 
பாசமெனும் கனியை கோபமெனும் 
கிளைகள் மறைக்கும் பொழுது 
காற்று எனும் பெருந்தன்மையினால் 
கோபமெனும் கிளையை விலக்கினாள்
பாசமெனும் கனியும் தெரியும் 
அதன் தன்மையும் புரியும்! 


பெண் பெற்றதனால் தாயாகிறாள் 
நாம் பிறந்ததனால் சேயாகிறோம்
அரிமாவில் நாம் இடம்
பெற்றதனால் தாயானோம் 
மற்ற நண்பர்களை பெற்றதனால் 
அனைவரும் நமக்கு சேயானார்கள்
ஒவ்வொருவரின் மனநிலையும் 
இப்படித்தான்  இருக்கவேண்டும் !


எப்படி தாய்க்கும் சேய்க்கும் 
இடையே எந்தவித எதிர்பார்ப்பும் 
இல்லாத அன்பும், பாசமும், 
அரவணைப்பும,பரிவும் ஏற்படுகிறதோ
இவற்றைப்போல நம் அரிமா 
நண்பர்களின் நட்பும் இருக்கவேண்டும் 
இவ்வாறு இருந்துவிட்டால் ஒருபோதும் 
இருக்காது கருத்து வேற்றுமை 
எனும் வேறுபாடு !


அரிமா நண்பர்களிடையே
பார்க்கக் கூடாதது கெளரவம்
நம்மில் சற்று குணம் குறைந்தவர்கள் 
இருக்கும் பட்சத்தில் 
அவர்களை ஒதுக்காமல்(தள்ளி வைக்காமல்)  
 உதாரணத்திற்கு எப்படி நாம் வாழ்க்கையில் 
வாசனைபூக்களிடையே வாசனை அற்ற
பூக்களையும் பயன்படுத்துகிறோமோ அது போல  மேலும் 
தாமரை இலை  தண்ணீரிலேயே இருந்தாலும் 
எப்படி ஒட்டியும் ஒட்டாமலும் 
இருக்கின்றதோ அதுபோல 
பகைமை பாராட்டாமல் 
வாழக்கற்றுக்கொண்டால் எப்போதும் 
நண்பர்களிடையே மிஞ்சுவது சந்தோசம் 
மட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை!
----------------------------------------------------------------------



அன்பே நியாயமா?

உன்னில்   என்னை 
காணும்   எண்ணம்  
உனக்கு   வேண்டும்                             
என்று   சொன்னது 
நான்   தான்!

     அதற்காக 

நான்  இருக்கும்போது 
நீ    எதற்கு 
என்று    நீ 
என்னை   மடியச்சொல்வது 
நியாயமா !