சனி, 4 செப்டம்பர், 2010

மனதில் நிறுத்துவதற்கு சில !

தாய் தந்தையை  காப்பாற்று
உடன் பிறந்தோர்க்கு செய்வதற்கு
துளியும் யோசிக்காதே !
மனைவி, மக்களை நேசி
உண்மையான நண்பர்களை தேர்ந்தெடு
நம்பிக்கையுடன் பழகு !
நன்றி மறவாதே

ஒரு வேளை உணவிட்டாலும்
அவர்களை உன் உயிர்
உள்ளவரை மறவாதே !
காட்டிக் கொடுக்காதே
பொய் சொல்லாதே
பிறர் நலன் கருதி பொய் சொல்
அது உண்மைக்கு சமமானது

பெற்றோர், உடன்பிறந்தோர்,நண்பர்கள்
இவர்களிடம் கெளரவம் பார்க்காதே !
உன்னில் சிறியவனிடம்
பணிவாக பேசு(இரு)
பெரியவரிடம் தைரியமாக பேசு
நீ நேர்மையானவனாக இருந்தால்!
அறியாத வயதில் நாம் தெரியாமல்           
செய்யும் காரியமும் பாவமே!

முடிந்த வரை நல்லதை நினை
நல்லதை பேசு
பேசுவதற்கு முன் யோசி
மோசமான குணமுடைய
நண்பர்களிடம் தாமரை இலை
தண்ணீர் போல வாழு
மற்றவர்களுக்கு  நல்லதொரு  முன்
 உதாரணமாக வாழ கற்றுக்கொள்!

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தாய் - தந்தை - கடமை

தாய் ஓர் உன்னதமான அர்த்தங்கள்
எல்லை வரையறுக்கப்படாத உயிர் !
தாய் தந்தையை நினை !
கடவுளை முடிந்தால் நினைத்துப் பார்
இல்லையென்றால் பரவாயில்லை
அந்த கடவுளுக்கே தெரியும்
நீ செய்வது சரியென்று !

கடமையை செய்  
முதலில் கடமை என்றால்
என்ன என்பதை தெரிந்து கொள்.
தாய், தந்தை, உடன் பிறந்தோர்கள்,
உற்றார், உறவினர்கள், உண்மையான
நண்பர்கள் இவர்களுக்கு நாம்
செய்ய வேண்டிய அனைத்தும்
நம் தலையாய கடமையாகும்.

இவற்றை நீ உருப்படியாக
செய்தாலே போதும் வேறு எந்த
தெய்வத்தையும் நினைக்க வேண்டியதில்லை !
இதனால் நான் கடவுளை கும்பிட வேண்டாம்
என்று சொல்லவில்லை .
நம்மில் ஒரு சிலர் மேற்கண்ட
கடமைகள் எதையும் செய்யாமல்
கடவுளை மட்டும் வணங்குபவர்களுக்காக
இதை சொல்கிறேன்.

இதற்கு என்னால் ஏகப்பட்ட
உதாரண புருஷர்களைக்  காட்ட முடியும்
என்பதைவிட இதைப் படிப்பவர்களே
இது போன்ற ஜென்மங்களை
சந்தித்திருப்பார்கள் என்பதே உண்மை.
இதைத்தான் நான் சுருக்கமாக
மனிதனை நினை! கடவுளை மற!
என்று குறிப்பிடுகின்றேன் .
இதை இப்படி எழுதச் சொல்வதே
அந்த கடவுள் தான் என்பதே

அப்பட்டமான  நிகழ்வு